நெய்தல் [ஐங்குறுநூறு--108]
===============
ஐந்தினைக்கும் உரிய உரிப்பொருள்களூள் இரக்கம் என்பது நெய்தல் திணைக்குரிய ஒழுக்கமாகும்*நெய்தல் திணைக்குக் கடலும் அதைச்சார்ந்த நிலமும் உரியது*சிறுபொழுது கதிரவன் மறையும் மாலை ஆகும்*
பெரும்பொழுது எல்லாக்காலங்களும் ஆகும்*
பெரும்பொழுது எல்லாக்காலங்களும் ஆகும்*
இரக்கம் என்பது தலைவனைப்பிரிந்த தலைவியின் மிகுதியான தனிமைத்துயரம் பற்றியதுஆகும்*
இச்செய்யுள் தாய்க்குரைத்த பத்து என்னும் பத்துப்பாடல்களில் ஒன்றாகும்*
தலைவி தலைவனின் களவு ஒழுக்கத்தைத் தோ ழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றபின் தோழி கூற்றாய் வருவது இப்பாடல்*
தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டனர்* திருமணம் புரிந்து கொள்வதாககூறிச்சென்ற தலைவன் நீண்ட நாள் வாராமல் காலம்
தாழ்த்தினான்*செவிலித்தாய் ஐயம் கொண்டாள்*அவள் தோழியிடம் தலைவியை த்தலைவன் மறந்து விட்டானோ? நும்மிடம் அவன் உரைத்தது யாது என வினவினாள்*அப்போது தோ ழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது*பாடலின் பொருள் பின் வருமாறு:
தோழியின் கூற்று;;-------அன்னையே நான் கூறுவதைக்கேட்பாய்! ஆற்றுக்கழிமுகத்தில் முள்ளிப்பூக்கள் மலரும் கடல்நிலத்தலைவன் எம் தலைவன்*எம் [தலைவியின்] தோள் துறப்பான் ஆயின் அவனால் விரும்பப்பட்ட தலைவியின் தோள் என்ன பயன் உடையது ?----
இது பாட்டின் சுருக்கம்*
விளக்கம் ;--தலைவி கற்பில் சிறந்தவள்* அவளை விரும்பிய தலைவன்
வேறு ஒரு பெண்ணை நினைப்பான் ஆயின் தலைவியின் தகுதி இழிவு படும் அல்லவா? என் தலைவியை இழிவாக எண்ணாதீர் ? என் தலைவியின்
தோளைத்தழுவிய தலைவன் பிறிதும் ஒரு பெண்ணை நினைக்கவும் மாட்டான்* என் தலைமகளின் தோள் ஒருவனை மட்டும் தீண்டும் தகைமை உடையது* இது நாம் அறிந்தும் அன்னையே தலவனை ஐயுறாதீர்/* வருவான் தலைவியின் முகம் நீர்முள்ளி பூப் போல மலர மணந்துகொள்வான்* இன்று அதில் உள்ள முள்ளைப்போல தோன்றும் தலைவன் மலர் போல் மகிழ்ச்சி தருவான் அன்னையே ஐயுற வேண்டாம்
எனத்தோழி கூறினாள்*
இப்பாடல் உணர்த்தும் பொருள் இதுவாகும்*கழிகளையுடைய கடல் என்பது
நெய்தல் நிலம்*முண்டகம் நெய்தல் நிலப்பூ* தலைவன் எம் தலைவியின்
தோள் துறக்கமாட்டான் எனத்தோழி கூறியது தலைவியின் இரக்கம்*
எனவே நெய்தல் திணை ஆயிற்று*
---
இச்செய்யுள் தாய்க்குரைத்த பத்து என்னும் பத்துப்பாடல்களில் ஒன்றாகும்*
தலைவி தலைவனின் களவு ஒழுக்கத்தைத் தோ ழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றபின் தோழி கூற்றாய் வருவது இப்பாடல்*
தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டனர்* திருமணம் புரிந்து கொள்வதாககூறிச்சென்ற தலைவன் நீண்ட நாள் வாராமல் காலம்
தாழ்த்தினான்*செவிலித்தாய் ஐயம் கொண்டாள்*அவள் தோழியிடம் தலைவியை த்தலைவன் மறந்து விட்டானோ? நும்மிடம் அவன் உரைத்தது யாது என வினவினாள்*அப்போது தோ ழி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது*பாடலின் பொருள் பின் வருமாறு:
தோழியின் கூற்று;;-------அன்னையே நான் கூறுவதைக்கேட்பாய்! ஆற்றுக்கழிமுகத்தில் முள்ளிப்பூக்கள் மலரும் கடல்நிலத்தலைவன் எம் தலைவன்*எம் [தலைவியின்] தோள் துறப்பான் ஆயின் அவனால் விரும்பப்பட்ட தலைவியின் தோள் என்ன பயன் உடையது ?----
இது பாட்டின் சுருக்கம்*
விளக்கம் ;--தலைவி கற்பில் சிறந்தவள்* அவளை விரும்பிய தலைவன்
வேறு ஒரு பெண்ணை நினைப்பான் ஆயின் தலைவியின் தகுதி இழிவு படும் அல்லவா? என் தலைவியை இழிவாக எண்ணாதீர் ? என் தலைவியின்
தோளைத்தழுவிய தலைவன் பிறிதும் ஒரு பெண்ணை நினைக்கவும் மாட்டான்* என் தலைமகளின் தோள் ஒருவனை மட்டும் தீண்டும் தகைமை உடையது* இது நாம் அறிந்தும் அன்னையே தலவனை ஐயுறாதீர்/* வருவான் தலைவியின் முகம் நீர்முள்ளி பூப் போல மலர மணந்துகொள்வான்* இன்று அதில் உள்ள முள்ளைப்போல தோன்றும் தலைவன் மலர் போல் மகிழ்ச்சி தருவான் அன்னையே ஐயுற வேண்டாம்
எனத்தோழி கூறினாள்*
இப்பாடல் உணர்த்தும் பொருள் இதுவாகும்*கழிகளையுடைய கடல் என்பது
நெய்தல் நிலம்*முண்டகம் நெய்தல் நிலப்பூ* தலைவன் எம் தலைவியின்
தோள் துறக்கமாட்டான் எனத்தோழி கூறியது தலைவியின் இரக்கம்*
எனவே நெய்தல் திணை ஆயிற்று*
---