Thursday, 4 February 2016

இரக்கம்

நெய்தல்               [ஐங்குறுநூறு--108]
===============
ஐந்தினைக்கும்  உரிய  உரிப்பொருள்களூள்  இரக்கம் என்பது  நெய்தல்  திணைக்குரிய  ஒழுக்கமாகும்*நெய்தல் திணைக்குக் கடலும்  அதைச்சார்ந்த நிலமும்  உரியது*சிறுபொழுது  கதிரவன்  மறையும் மாலை  ஆகும்*
பெரும்பொழுது  எல்லாக்காலங்களும் ஆகும்*
       இரக்கம்  என்பது  தலைவனைப்பிரிந்த தலைவியின் மிகுதியான தனிமைத்துயரம் பற்றியதுஆகும்*
இச்செய்யுள்  தாய்க்குரைத்த பத்து  என்னும்  பத்துப்பாடல்களில்  ஒன்றாகும்*

தலைவி தலைவனின்  களவு  ஒழுக்கத்தைத்  தோ ழி  செவிலித்தாய்க்கு  அறத்தொடு  நின்றபின்  தோழி கூற்றாய்  வருவது   இப்பாடல்*


தலைவனும்  தலைவியும்  களவு  ஒழுக்கத்தில்   ஈடுபட்டனர்* திருமணம் புரிந்து கொள்வதாககூறிச்சென்ற  தலைவன்  நீண்ட  நாள்  வாராமல் காலம்
தாழ்த்தினான்*செவிலித்தாய்  ஐயம்  கொண்டாள்*அவள்  தோழியிடம்  தலைவியை த்தலைவன் மறந்து விட்டானோ?  நும்மிடம்  அவன்  உரைத்தது  யாது  என வினவினாள்*அப்போது  தோ ழி கூறியதாக  இப்பாடல்  அமைந்துள்ளது*பாடலின்  பொருள்  பின் வருமாறு:

தோழியின்  கூற்று;;-------அன்னையே  நான்  கூறுவதைக்கேட்பாய்!  ஆற்றுக்கழிமுகத்தில் முள்ளிப்பூக்கள் மலரும்  கடல்நிலத்தலைவன் எம் தலைவன்*எம் [தலைவியின்]  தோள்  துறப்பான் ஆயின்  அவனால்  விரும்பப்பட்ட  தலைவியின்  தோள் என்ன  பயன்  உடையது ?----
இது  பாட்டின் சுருக்கம்*
     
விளக்கம்  ;--தலைவி  கற்பில்  சிறந்தவள்*  அவளை  விரும்பிய தலைவன்
வேறு  ஒரு பெண்ணை  நினைப்பான்  ஆயின்  தலைவியின்  தகுதி  இழிவு படும்  அல்லவா?  என் தலைவியை இழிவாக  எண்ணாதீர் ? என் தலைவியின்
தோளைத்தழுவிய  தலைவன்  பிறிதும்  ஒரு  பெண்ணை நினைக்கவும்  மாட்டான்* என் தலைமகளின்   தோள்  ஒருவனை  மட்டும்  தீண்டும்  தகைமை  உடையது* இது  நாம்  அறிந்தும்  அன்னையே  தலவனை  ஐயுறாதீர்/* வருவான்  தலைவியின் முகம்  நீர்முள்ளி பூப் போல  மலர  மணந்துகொள்வான்*  இன்று  அதில்  உள்ள  முள்ளைப்போல  தோன்றும் தலைவன்  மலர் போல் மகிழ்ச்சி  தருவான்   அன்னையே  ஐயுற வேண்டாம்
எனத்தோழி  கூறினாள்*
இப்பாடல்  உணர்த்தும்  பொருள்  இதுவாகும்*கழிகளையுடைய கடல் என்பது
நெய்தல்  நிலம்*முண்டகம்  நெய்தல்  நிலப்பூ* தலைவன்  எம் தலைவியின்
தோள்  துறக்கமாட்டான்  எனத்தோழி  கூறியது  தலைவியின்  இரக்கம்*
எனவே  நெய்தல்  திணை  ஆயிற்று*








---

No comments:

Post a Comment