ஊடல் என்பது மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஆகும்*மருதத்திணை
பாடல்களை வகுக்கும் போது அதில் வரும் முதல் ,கரு ,உரிப்பொருளில்
ஒன்று வரினும் அப்பாடல் அத்திணைப்பாடல் என வகுக்கப்படும்*
ஐங்குறுநூறு என்னும் அகநூலில் ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே
நூறு பாடல்கள் அமைந்துள்ளன * முதலில் வருவது மருதத்திணைப்பாடலாகும்* ஐங்குறுநூற்றில் ஒவ்வொருதிணைக்கு வரும் நூறுபாடல்களும் பத்துப்பத்துப்பாடல் கள் கொண்ட சிறுபிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன*
மருத்தத்திணையில் முதலாவதுபத்துப்ப்ப்பாடல்களும் வேட்கைப்பத்து என்பதகும்*அதில் வரும் ஒரு பாடலைக்காண்போம்*
--------------------
பாட்டின் பொருள்;;திருமணத்தின் பின் களவுக்காலத்தில் என்னை ப்பற்றி
என்ன நினைத்தீர் எனக்கேட்ட தலைவனுக்கு த்தோழி கூறிய பதிலாக
இப்பாடல் அமந்துள்ளது
--------------
மன்னன் ஆதன் வாழ்க! அவினி வாழ்க! வேந்தனின் பகைமை கெட்டொழிக*அவ்வேந்தன் நீடூழி வாழ்க என க்கூறித்தன் பிரிவுத்துயரை
மறைத்து வாழ்ந்துவந்தாள் தலைவி*
தோழியராகிய யாங்கள் தாமரை பூத்த நீராடும் துறை அமைந்த ஊருக்குத்தலைவன் விரைந்து வந்து எம் தலைவியை திருமணம் செய்க என்றும் தலைவனின் உறவினர் வந்து மகட்கொடை வேண்டும் பொழுதில்
எம்தந்தையும் மறுக்காமல்திருமணத்திற்கு உடன்படுக எனவும் வேண்டிக் கடவுளைத் தொழுதோம் எனத் தோழியர் கூறினர்*
----------------
*இப்பாடல் மருதத்திணைப்பாடல் என்று வகுக்கப்பட்டுள்ளது* மருதத்திணைக்குரிய பாடலின் உரிப்பொருள் ஊடல் ஆகும்* ஊடலூக்குரிய காரணம் தலைவனின் தகாத ஒழுக்கமாகும்*கற்பொழுக்கத்தில் தலைவன் தலைவியை ப்பிரிந்து பரத்தையரோடு [பொதுமகளிர்] பலநாள் பழகியபின் மீண்டும் தன் மனைக்குத்திரும்பும் போது தலைவி ஊடுவதாக அகப் பாடல்களில்பெரும்பாலும் சொல்லப்படுகிறது*ஊடல் கற்பு காலத்திற்குரிய
உரிப்பொருள் ஆகும்*
இந்த ஐங்குறுநூற்றுப்பாடல் தலைவிக்கு திருமணம் ஆனபின் களவுக்காலத்தில் நடந்ததை பேசுகிறாது*தலைவனும் தலைவியும் பிறர் அறியாவண்ணம் களவொழுக்கத்தி ல் ஈடுபட்டுவந்துள்ளனர்*தலைவன் உன்னைப்பெற்றோர் உடன்பட திருமணம் செய்வேன் என உறுதி கூறிச்சென்றுள்ளான்*அதை தோழி மட்டும் அறிவாள் *பிறர் அறியாத அந்நிலையில் தலைவி மற்றும் தோழியின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை திருமணத்தின் பின் தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது*இது இப் பாடலின் துறை ஆகும்*
இப்பாடலில் மருதத்திற்கு உரிய ஊடல் உரிபொருளாக வரவில்லை*
ஆயினும் இது மருதப்பாடல் ? அகன்ற பொய்கையில் மலர்ந்த தாமரை
பூத்த நீராடும் துறைகள் கொண்ட ஊரின் தலைவன் நம் தலைவியை மணம் முடிக்க வேண்டும் என்னும் இடத்தில்; மருதநிலத்து ஊர் பற்றி வருவதால் கருப்பொருள் பற்றி மருதத்திணைப்பாடல் ஆயிற்று*
தலைவி அரசன் பகை போர் இன்றி நீண்ட நாள் வாழ்க என்பதையே
எண்ணி த்தலைவி அமைதியாக பொறுத்திருந்தாள்*தோழி மட்டுமே தலைவன் உடன் வந்து தலைவியை மணம் புரிய வேண்டும் தலைவியின் பெற்றோரும் மறுக்காமல் உடன்பட வேண்டும் என த்தெய்வத்தை வேண்டியிருந்தாள்*
நீர் நிறைந்த குளத்தில்தாமரை பூத்துள்ள ஊருக்குத்த்லைவன் எனக்கூறியதினால் த்லவனின் உயர்வும் திருமணம் செய்துகொள்வன் என்னும் உள்ளுறை பொருள் உணர்த்தப்படுகிறது*
ஆதன் அவினி என்பது சேரமன்னன் பெயராகும்* தலைவி தன் நாட்டு மன்னன் போரின்றி நீடு வாழ்ந்தால் தன் வாழ்வும் சிறக்கும் என எண்ணிப்பொறூத்திருந்தாள்* தலைவனைப்பிரிந்த வருத்தத்தில் கண்ணீர் விட்டால் பிறர் அவள் களவு ஒழுக்கத்தை அறிந்து அலர் பேசுவர்*
தலைவனும் தலைவியும் காதலித்தபின்னும் அவர்கள் தாமே திருமணம் செய்து கொள்ளவில்லை* தலைவன் உறவினர் தலைவியின் பெற்றோரிடம்
பெண் கேட்டு வருவர் *அப்போது தலைவியின் தந்தை மற்க்காமல் உடன் பட வேண்டும் என்பதே தோழி இறைவனிடம் வேண்டுவதாகும்*
இப்பாடல் அழகியது*இம்மருததிணைப்பாடலில் ஊடலே இல்லை*
நிலம் மட்டும் மருதம் *
பழந்தமிழர் திருமணத்தில் பெண்ணின் பெற்றோர் உடன்படவே திருமணம்
நடந்தது என்பதை அறியலாம்*
ஐங்குறுநூறு---6
பாடல்களை வகுக்கும் போது அதில் வரும் முதல் ,கரு ,உரிப்பொருளில்
ஒன்று வரினும் அப்பாடல் அத்திணைப்பாடல் என வகுக்கப்படும்*
ஐங்குறுநூறு என்னும் அகநூலில் ஐந்து திணைகளுக்கும் தனித்தனியே
நூறு பாடல்கள் அமைந்துள்ளன * முதலில் வருவது மருதத்திணைப்பாடலாகும்* ஐங்குறுநூற்றில் ஒவ்வொருதிணைக்கு வரும் நூறுபாடல்களும் பத்துப்பத்துப்பாடல் கள் கொண்ட சிறுபிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன*
மருத்தத்திணையில் முதலாவதுபத்துப்ப்ப்பாடல்களும் வேட்கைப்பத்து என்பதகும்*அதில் வரும் ஒரு பாடலைக்காண்போம்*
--------------------
பாட்டின் பொருள்;;திருமணத்தின் பின் களவுக்காலத்தில் என்னை ப்பற்றி
என்ன நினைத்தீர் எனக்கேட்ட தலைவனுக்கு த்தோழி கூறிய பதிலாக
இப்பாடல் அமந்துள்ளது
--------------
மன்னன் ஆதன் வாழ்க! அவினி வாழ்க! வேந்தனின் பகைமை கெட்டொழிக*அவ்வேந்தன் நீடூழி வாழ்க என க்கூறித்தன் பிரிவுத்துயரை
மறைத்து வாழ்ந்துவந்தாள் தலைவி*
தோழியராகிய யாங்கள் தாமரை பூத்த நீராடும் துறை அமைந்த ஊருக்குத்தலைவன் விரைந்து வந்து எம் தலைவியை திருமணம் செய்க என்றும் தலைவனின் உறவினர் வந்து மகட்கொடை வேண்டும் பொழுதில்
எம்தந்தையும் மறுக்காமல்திருமணத்திற்கு உடன்படுக எனவும் வேண்டிக் கடவுளைத் தொழுதோம் எனத் தோழியர் கூறினர்*
----------------
*இப்பாடல் மருதத்திணைப்பாடல் என்று வகுக்கப்பட்டுள்ளது* மருதத்திணைக்குரிய பாடலின் உரிப்பொருள் ஊடல் ஆகும்* ஊடலூக்குரிய காரணம் தலைவனின் தகாத ஒழுக்கமாகும்*கற்பொழுக்கத்தில் தலைவன் தலைவியை ப்பிரிந்து பரத்தையரோடு [பொதுமகளிர்] பலநாள் பழகியபின் மீண்டும் தன் மனைக்குத்திரும்பும் போது தலைவி ஊடுவதாக அகப் பாடல்களில்பெரும்பாலும் சொல்லப்படுகிறது*ஊடல் கற்பு காலத்திற்குரிய
உரிப்பொருள் ஆகும்*
இந்த ஐங்குறுநூற்றுப்பாடல் தலைவிக்கு திருமணம் ஆனபின் களவுக்காலத்தில் நடந்ததை பேசுகிறாது*தலைவனும் தலைவியும் பிறர் அறியாவண்ணம் களவொழுக்கத்தி ல் ஈடுபட்டுவந்துள்ளனர்*தலைவன் உன்னைப்பெற்றோர் உடன்பட திருமணம் செய்வேன் என உறுதி கூறிச்சென்றுள்ளான்*அதை தோழி மட்டும் அறிவாள் *பிறர் அறியாத அந்நிலையில் தலைவி மற்றும் தோழியின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை திருமணத்தின் பின் தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது*இது இப் பாடலின் துறை ஆகும்*
இப்பாடலில் மருதத்திற்கு உரிய ஊடல் உரிபொருளாக வரவில்லை*
ஆயினும் இது மருதப்பாடல் ? அகன்ற பொய்கையில் மலர்ந்த தாமரை
பூத்த நீராடும் துறைகள் கொண்ட ஊரின் தலைவன் நம் தலைவியை மணம் முடிக்க வேண்டும் என்னும் இடத்தில்; மருதநிலத்து ஊர் பற்றி வருவதால் கருப்பொருள் பற்றி மருதத்திணைப்பாடல் ஆயிற்று*
தலைவி அரசன் பகை போர் இன்றி நீண்ட நாள் வாழ்க என்பதையே
எண்ணி த்தலைவி அமைதியாக பொறுத்திருந்தாள்*தோழி மட்டுமே தலைவன் உடன் வந்து தலைவியை மணம் புரிய வேண்டும் தலைவியின் பெற்றோரும் மறுக்காமல் உடன்பட வேண்டும் என த்தெய்வத்தை வேண்டியிருந்தாள்*
நீர் நிறைந்த குளத்தில்தாமரை பூத்துள்ள ஊருக்குத்த்லைவன் எனக்கூறியதினால் த்லவனின் உயர்வும் திருமணம் செய்துகொள்வன் என்னும் உள்ளுறை பொருள் உணர்த்தப்படுகிறது*
ஆதன் அவினி என்பது சேரமன்னன் பெயராகும்* தலைவி தன் நாட்டு மன்னன் போரின்றி நீடு வாழ்ந்தால் தன் வாழ்வும் சிறக்கும் என எண்ணிப்பொறூத்திருந்தாள்* தலைவனைப்பிரிந்த வருத்தத்தில் கண்ணீர் விட்டால் பிறர் அவள் களவு ஒழுக்கத்தை அறிந்து அலர் பேசுவர்*
தலைவனும் தலைவியும் காதலித்தபின்னும் அவர்கள் தாமே திருமணம் செய்து கொள்ளவில்லை* தலைவன் உறவினர் தலைவியின் பெற்றோரிடம்
பெண் கேட்டு வருவர் *அப்போது தலைவியின் தந்தை மற்க்காமல் உடன் பட வேண்டும் என்பதே தோழி இறைவனிடம் வேண்டுவதாகும்*
இப்பாடல் அழகியது*இம்மருததிணைப்பாடலில் ஊடலே இல்லை*
நிலம் மட்டும் மருதம் *
பழந்தமிழர் திருமணத்தில் பெண்ணின் பெற்றோர் உடன்படவே திருமணம்
நடந்தது என்பதை அறியலாம்*
ஐங்குறுநூறு---6
No comments:
Post a Comment