குறிஞ்சி பாடல் [ ஐங்குறு நூறு241 ]
------------
புணர்தல் என்பது தலைவனும் தலைவியும் தாமே கூடும் கூட்டம் ஆகும்*
இது களவு ஒழுக்கத்தின் கண் நிகழ்வது ஆகும்*பிறர் அறியாவண்ணம் தலைவனும் தலைவியும் மனம் ஒத்தவராய் உள்ளமும் உடலும் ஒன்றாகி
மகிழ்தல் ஆம்*
இப்பாடல் வெறிப்பத்து என்னும் பத்து ப்பாடலுள் ஒன்றாகும்*
வெறியாடல் என்பது வேலன்வெறியாடல் என வரும்* வேலன் கடவுள்
குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன் ஆவன்* வெறியாடல் என்பது தெய்வத்தால் உண்டான குறை நீங்குமாறு செய்யும் பூசையும் ஆட்டமும் ஆகும்* வேலன் என்பது பூசை செய்வானையும் குறிக்கும்*
இப்பாடலின் துறை பின் வருமாறு::: தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டனர்* தலைவியிடம் உள்ளமும் உடலும் மாறுபட்டது
கண்ட தாய் தலைவியை[ இற்செறித்தாள்] இல்லத்தில் காவலிட்டாள்* தலைவி தன் தலவனை நினைந்து வருந்தினாள்*தன்னை ப்பெற்றோர் பிறன் ஒருவனுக்கு மணம் முடிப்பரோ எனவும் கலங்கி மெலிந்தாள்* இதன் காரணம் உணராத தாய் அறிவரை [ சோதிடர் முதலானோர்]] வினவவும் அவர் அக்குறைபாடு தெய்வத்தால் வந்தது என்றனர்* தெய்வக்குறை நீங்கின் மகள் நலம் உறுவாள் எனக்கருதி ய தாய் வேலனை அழைத்துத் தெய்வக்குறை நீங்கும் வண்ணம் வெறியாடல் நிகழ்த்துக என வேண்டினாள்* உண்மைக் காரணம் அறிந்த தோழி செவிலித்தாய்க்கு உண்மை உணர்த்தும் வண்ணம் அறத்தொடு நின்று [[ தலைவி தன் ஒழுக்கத்தில் குறைவு படாமல் இருத்தல்]] தலைவியிடம் கூறும் கூற்றாய் இப்பாடல் வருகிறது*
பாடலின் பொருள்-----------
அழகிய பற்களை உடைய தோழியே ! {{ தோழி தலைவியை தோழி என்றழைப்பாள் }} நம் தாய் நாம் உற்ற துயரம் கண்டு அதன் காரணம்
அறிவதற்கு வேலனை அழைத்து அதன் காரணம் வினவுவாள் .ஆனால் மணம் கமழும்
குறிஞ்சி நாட்டின் தலைமகனுடன் யாம் கொண்டுள்ள காதல் தொடர்பை
அறிந்து கூற அவன் வல்லவனோ ? அவனால் அது இயலாதல்லவா?--**
------------
புணர்தல் என்பது தலைவனும் தலைவியும் தாமே கூடும் கூட்டம் ஆகும்*
இது களவு ஒழுக்கத்தின் கண் நிகழ்வது ஆகும்*பிறர் அறியாவண்ணம் தலைவனும் தலைவியும் மனம் ஒத்தவராய் உள்ளமும் உடலும் ஒன்றாகி
மகிழ்தல் ஆம்*
இப்பாடல் வெறிப்பத்து என்னும் பத்து ப்பாடலுள் ஒன்றாகும்*
வெறியாடல் என்பது வேலன்வெறியாடல் என வரும்* வேலன் கடவுள்
குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன் ஆவன்* வெறியாடல் என்பது தெய்வத்தால் உண்டான குறை நீங்குமாறு செய்யும் பூசையும் ஆட்டமும் ஆகும்* வேலன் என்பது பூசை செய்வானையும் குறிக்கும்*
இப்பாடலின் துறை பின் வருமாறு::: தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் ஈடுபட்டனர்* தலைவியிடம் உள்ளமும் உடலும் மாறுபட்டது
கண்ட தாய் தலைவியை[ இற்செறித்தாள்] இல்லத்தில் காவலிட்டாள்* தலைவி தன் தலவனை நினைந்து வருந்தினாள்*தன்னை ப்பெற்றோர் பிறன் ஒருவனுக்கு மணம் முடிப்பரோ எனவும் கலங்கி மெலிந்தாள்* இதன் காரணம் உணராத தாய் அறிவரை [ சோதிடர் முதலானோர்]] வினவவும் அவர் அக்குறைபாடு தெய்வத்தால் வந்தது என்றனர்* தெய்வக்குறை நீங்கின் மகள் நலம் உறுவாள் எனக்கருதி ய தாய் வேலனை அழைத்துத் தெய்வக்குறை நீங்கும் வண்ணம் வெறியாடல் நிகழ்த்துக என வேண்டினாள்* உண்மைக் காரணம் அறிந்த தோழி செவிலித்தாய்க்கு உண்மை உணர்த்தும் வண்ணம் அறத்தொடு நின்று [[ தலைவி தன் ஒழுக்கத்தில் குறைவு படாமல் இருத்தல்]] தலைவியிடம் கூறும் கூற்றாய் இப்பாடல் வருகிறது*
பாடலின் பொருள்-----------
அழகிய பற்களை உடைய தோழியே ! {{ தோழி தலைவியை தோழி என்றழைப்பாள் }} நம் தாய் நாம் உற்ற துயரம் கண்டு அதன் காரணம்
அறிவதற்கு வேலனை அழைத்து அதன் காரணம் வினவுவாள் .ஆனால் மணம் கமழும்
குறிஞ்சி நாட்டின் தலைமகனுடன் யாம் கொண்டுள்ள காதல் தொடர்பை
அறிந்து கூற அவன் வல்லவனோ ? அவனால் அது இயலாதல்லவா?--**
இது பாடலின் பொருள்..
இதில் தோழி தலைவியையும் உட்படுத்தி நாம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றாள்*
தோழி மட்டும் தலைவியின் களவு ஒழுக்கத்தை அறிந்துள்ளாள்*பிறர் அறியார் * தலைவி மெலிந்து வருதுவதற்கு தெய்வமே காரணம் என்பது
பிற மக்கள் அறிந்த காரணம்** குறீஞ்சி நாட்டுத்தலைவனின் நட்பை
வேலன் அறியான் என்று செவிலித்தாய் காதில் விழுமாறு தோழி தலைவியிடம் கூறுகின்றாள்* அருகிலிருந்து கேட்ட செவிலித்தாய் தலைவியின் காதலை உணர்ந்து கொண்டாள்*தலைவன் மணம் வீசும்
குறிஞ்சித்தலைவன் எனத்தோழி கூறியதினால் தலைமகன் நல்ல புகழ் பெற்றவன் என்பதும் உணர்த்தினாள் *செவிலித்தாய் நற்றாய்க்கும் நற்றாய்
தந்தைக்கும் உண்மை உணர்த்தி யபின் த் தலைவியின் திருமணத்திற்கு ப்பெற்றோர் உடன்படுவர் என்பது நாட்டு வழக்கு* குறிஞ்சி நாடன் என்றதால் குறிஞ்சிதிணை புலப்பட்டது* பிறர் அறியாத காதல் புணர்தலை உணர்த்தியது*
`
இதில் தோழி தலைவியையும் உட்படுத்தி நாம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றாள்*
தோழி மட்டும் தலைவியின் களவு ஒழுக்கத்தை அறிந்துள்ளாள்*பிறர் அறியார் * தலைவி மெலிந்து வருதுவதற்கு தெய்வமே காரணம் என்பது
பிற மக்கள் அறிந்த காரணம்** குறீஞ்சி நாட்டுத்தலைவனின் நட்பை
வேலன் அறியான் என்று செவிலித்தாய் காதில் விழுமாறு தோழி தலைவியிடம் கூறுகின்றாள்* அருகிலிருந்து கேட்ட செவிலித்தாய் தலைவியின் காதலை உணர்ந்து கொண்டாள்*தலைவன் மணம் வீசும்
குறிஞ்சித்தலைவன் எனத்தோழி கூறியதினால் தலைமகன் நல்ல புகழ் பெற்றவன் என்பதும் உணர்த்தினாள் *செவிலித்தாய் நற்றாய்க்கும் நற்றாய்
தந்தைக்கும் உண்மை உணர்த்தி யபின் த் தலைவியின் திருமணத்திற்கு ப்பெற்றோர் உடன்படுவர் என்பது நாட்டு வழக்கு* குறிஞ்சி நாடன் என்றதால் குறிஞ்சிதிணை புலப்பட்டது* பிறர் அறியாத காதல் புணர்தலை உணர்த்தியது*
`
No comments:
Post a Comment