காம நோய் கண்ட தலவிக்கு ப்பூசாரி பேய் ஓட்டுதல் சங்க காலத்திலும் இருந்தது
-------------------------------------------------------------------------------------------------------
இந்நற்றிணை ப்பாடலின் ஆசிரியர் பிரமாசாரி என்பதாகும்.இப்பெயர் வடமொழிப்பெயர் .இதன்
பொருள் திருமணம் செய்யதவர் என உணர்த்துவதாகும்.
இபாடல் குறிஞ்சித்திணை யில் அமைந்துள்ளது.*
துறை; தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது .
தலைவியின் தோழியாகிய பெண் தலைவியின் களவொழுக்கத்தை அறிந்துள்ளாள்.
தலைவியின் நற்றாயும் பிறரும் அறிந்திருக்கவில்லை. களவொழுக்கத்தின் பின் தலைவின்
தலைவியின் உடலும் உள்ளமும் மாறிவிட்டது .இதை உணர்ந்த அவள் அன்னை முருகக்கடவுள்
தலைவிக்கு நோய் தந்துவித்ததோ என எண்ணி வேலன் என்னும் பூசாரியை அழைத்து வந்து
பூசைபண்ண முயழ்கிறாள் . சாமியோ பேயோ இப்பெண்ணை தீண்டியது என எண்ணி
இவ்வாறு செய்தனர் *இது பண்டைய நாளில் வெறி விலக்குதல் எனப்பட்டது.
இது பற்றியது இப்பாட்டு*
பாடற்பொருள்
------------------
முருகனே நீ நீடு வாழ்க .* குறிஞ்சி நாட்டுத் தலைவன் மார்பை த் தீண்டியதால் தலைவிக்கு வந்த
காம நோய் முருகனால் வந்தது இல்லை என த் தெரிந்தும் பூசை பண்ணி பலி பெற வந்த நீ கடவுள்
ஆயினும் அகட்டும் * ஆனல் நீ மடப்பம் உடையோன் ஆவாய்*
தலைவன் குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். ம லைனாடு அவன் நாடு* அந்த நாடு கடவுள் தன்மை
பெற்றது. அங்கு உள்ள சுனைகளில் குவளை மலர்கள் பூத்துள்ளன*குருதி நிறத்தில் காந்தள் பூக்கள்
பூத்துள்ளன * அண்மையில் அருவி ஓசையுடன் கொட்டுகிறது .அங்கு சூரரமகள் இப்பூக்களைச்சூடி ஆடுகின்றாள் * அம்மலைக்குத்தலைவன் தலைவியை களவில் புணர்ந்து காம நோய் தந்தான்*
அந்த நோய் முருகன் தந்தது என்று அன்னை வருந்துகிறாள்* கடப்பமாலை சூடிய வேலனை அழைத்து
வந்து தலைவியின் மயக்கம் தீர வெறி யாட்டு நிகழ்துகின்றனர்* அவன் பூசை செய்து பலி பொருள்
பெற்றுச்செல்வான்* அவன் செய்வது கடவுளுக்கு ஆயினும் ஆகுக. வேலன் மடமை உடையவனே*
மலை கடவுள் தன்மை கொண்டது * அம்மலையில் தேவமகளிர் நடனம் புரிவர்* அவ்வரமகளிர்
குருதி நிறத்தில் குவளை மலர்களை சூடியுள்ளனர்* அருவியின் ஒசைக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர்*
முருகன் இளம்பெண்களை மயங்குமாறு வருத்துவான் என்பது சங்ககாலத்து நம்பிக்கை* வேலன் என்பான் பூசாரி.அவன் கார்காலத்தில் பூக்கும் கடப்பம்பூ மாலை சூடி வந்துள்ளான் * அப்பெண்ணின்
மயக்கம் தீர சாமி ஆடுவான்* அதற்குக் கூலியாக ப்பொருள் பெற்றுச்செல்வான்*அது பலி எனப்பட்டது*
No comments:
Post a Comment