----------------------------
துறை:
இப்பாடல் பரத்தையின் கூற்றில் அமைந்தது* தலைவன் தலைவியை ப்பிரிந்து பரத்தையிடம்
சென்று வாழ்ந்து வருகிறான்*மனைவியை மறந்துவிட்டான்*அப்போது தலைவி மகனைப்பெற்றாள்*
அதுன் கேட்ட தலைவன் தலைவியைக்காண இரவில் யாரும் அறியாவண்ணம் வந்தான்* அச்செய்தியை
தலைவியின் உற்றவர் கேட்கும் வண்ணம் பரத்தை நகைப்புடன் கூறுகின்றாள்*
பாடலின் பொருள்
-------------------------
தலைவனின் இல்லம் காவலை உடையது. அதன் முன் பந்தல் இடப்பட்டுள்ளது *பந்தல் கீழ் மணல்
பரப்பப்பட்டுள்ளது* பந்தல் தென்னக்கீற்றால் வேயப்பட்டுள்ளது* தலைவனுக்கு ப் பெரும்பாணர் காவல்
செய்கின்றனர்*அது போல தலைவியின் இல்லத்தை அணிகலன் பூண்ட மகளிர் நல்ல நிமித்தமாக நின்று கவனிக்கின்றனர்*
மணம் மிகுந்த மெல்லிய அணையின் மீது அண்மையில் பிறந்த புதல்வன் உறங்குகிறான் *அவன்
அருகில் செவிலித்தாய் உறங்குகிறாள்* குழந்தை பிறந்த புதிய நாற்றம் வீசுகிறது*
வெண்கடுகு அப்பி எண்ணெய் தேய்த்து நீராடி குளிர்ந்த நெய் பூசிய உடம்பினை உடைய
மனைவி இரு இமைகளும் பொருந்த உறங்குகிறாள்*
நீர்த்துறயின் தலைவன் அந்த நேரம் வீடு திரும்புகிறான்*அதன் காரணம் எது எனில் தன் தந்தையின்
பெயரன் பிறந்துள்ளான் என்பதால்*
பரத்தை நகைப்புடன் இதை தலைவியின் தோழியர் கேட்குமாறு கூறுகிறாள்.தலைவன் என்னையே
விருபுகிறான். ஆயினும் மகனை க்காணும் விருப்பத்தினால் யாரும் காணாவகையில் இல்லம் புகுந்த்தான் என பரத்தை நகைப்புடன் பேசுகிறாள்