Sunday, 23 February 2025

கோண்மா நெடுங்கோட்டனார் மருதப்பாடல்

நற்றிணை பாடல் 40
----------------------------
துறை:
இப்பாடல் பரத்தையின் கூற்றில்  அமைந்தது* தலைவன் தலைவியை ப்பிரிந்து பரத்தையிடம்
சென்று வாழ்ந்து வருகிறான்*மனைவியை மறந்துவிட்டான்*அப்போது தலைவி மகனைப்பெற்றாள்*
அதுன் கேட்ட தலைவன் தலைவியைக்காண இரவில் யாரும் அறியாவண்ணம் வந்தான்* அச்செய்தியை
தலைவியின் உற்றவர் கேட்கும் வண்ணம் பரத்தை நகைப்புடன் கூறுகின்றாள்*


பாடலின் பொருள்
-------------------------
        தலைவனின் இல்லம் காவலை உடையது. அதன்  முன் பந்தல் இடப்பட்டுள்ளது *பந்தல் கீழ் மணல்
பரப்பப்பட்டுள்ளது* பந்தல் தென்னக்கீற்றால் வேயப்பட்டுள்ளது* தலைவனுக்கு ப் பெரும்பாணர் காவல்
செய்கின்றனர்*அது போல  தலைவியின் இல்லத்தை அணிகலன் பூண்ட மகளிர்  நல்ல நிமித்தமாக நின்று கவனிக்கின்றனர்*

          மணம் மிகுந்த மெல்லிய அணையின் மீது அண்மையில் பிறந்த புதல்வன் உறங்குகிறான் *அவன் 
அருகில் செவிலித்தாய்  உறங்குகிறாள்* குழந்தை பிறந்த புதிய நாற்றம் வீசுகிறது*
           
      வெண்கடுகு அப்பி எண்ணெய் தேய்த்து நீராடி குளிர்ந்த நெய் பூசிய உடம்பினை உடைய
மனைவி    இரு இமைகளும் பொருந்த உறங்குகிறாள்*
    நீர்த்துறயின் தலைவன் அந்த நேரம் வீடு  திரும்புகிறான்*அதன் காரணம் எது எனில் தன் தந்தையின்
பெயரன் பிறந்துள்ளான் என்பதால்*
    பரத்தை நகைப்புடன் இதை தலைவியின் தோழியர் கேட்குமாறு கூறுகிறாள்.தலைவன் என்னையே 
விருபுகிறான். ஆயினும் மகனை க்காணும் விருப்பத்தினால் யாரும் காணாவகையில் இல்லம் புகுந்த்தான் என பரத்தை நகைப்புடன் பேசுகிறாள்                                                                           

 

Tuesday, 4 February 2025

நற்றிணை

பாடல் 34   
     காம நோய் கண்ட தலவிக்கு ப்பூசாரி  பேய் ஓட்டுதல்  சங்க காலத்திலும் இருந்தது
-------------------------------------------------------------------------------------------------------
இந்நற்றிணை ப்பாடலின் ஆசிரியர்  பிரமாசாரி என்பதாகும்.இப்பெயர் வடமொழிப்பெயர் .இதன்
பொருள் திருமணம் செய்யதவர் என உணர்த்துவதாகும்.

 இபாடல் குறிஞ்சித்திணை யில் அமைந்துள்ளது.*
துறை;  தோழி தெய்வத்துக்கு  உரைப்பாளாய் வெறி விலக்கியது .
             தலைவியின் தோழியாகிய பெண் தலைவியின் களவொழுக்கத்தை அறிந்துள்ளாள்.
              தலைவியின் நற்றாயும் பிறரும் அறிந்திருக்கவில்லை. களவொழுக்கத்தின் பின் தலைவின்
            தலைவியின் உடலும் உள்ளமும் மாறிவிட்டது .இதை உணர்ந்த அவள் அன்னை முருகக்கடவுள்
           தலைவிக்கு நோய் தந்துவித்ததோ என எண்ணி வேலன் என்னும் பூசாரியை அழைத்து வந்து
            பூசைபண்ண முயழ்கிறாள் . சாமியோ பேயோ  இப்பெண்ணை தீண்டியது  என எண்ணி
             இவ்வாறு  செய்தனர் *இது பண்டைய நாளில் வெறி விலக்குதல் எனப்பட்டது.
            இது பற்றியது  இப்பாட்டு*



   பாடற்பொருள்
------------------
   முருகனே நீ நீடு வாழ்க .* குறிஞ்சி நாட்டுத் தலைவன் மார்பை த் தீண்டியதால் தலைவிக்கு வந்த 
காம நோய்  முருகனால் வந்தது இல்லை என த் தெரிந்தும்  பூசை பண்ணி பலி பெற வந்த நீ கடவுள்
ஆயினும் அகட்டும் * ஆனல் நீ மடப்பம் உடையோன் ஆவாய்*

தலைவன் குறிஞ்சி நிலத்திற்கு உரியவன். ம லைனாடு அவன் நாடு* அந்த நாடு கடவுள் தன்மை 
பெற்றது. அங்கு உள்ள சுனைகளில் குவளை மலர்கள் பூத்துள்ளன*குருதி நிறத்தில் காந்தள் பூக்கள்
பூத்துள்ளன * அண்மையில் அருவி ஓசையுடன் கொட்டுகிறது .அங்கு சூரரமகள் இப்பூக்களைச்சூடி ஆடுகின்றாள் * அம்மலைக்குத்தலைவன்  தலைவியை களவில் புணர்ந்து காம நோய் தந்தான்*
அந்த நோய் முருகன் தந்தது என்று அன்னை வருந்துகிறாள்* கடப்பமாலை சூடிய வேலனை அழைத்து
வந்து தலைவியின் மயக்கம் தீர வெறி யாட்டு நிகழ்துகின்றனர்* அவன் பூசை செய்து பலி பொருள்
பெற்றுச்செல்வான்* அவன் செய்வது  கடவுளுக்கு ஆயினும் ஆகுக. வேலன் மடமை உடையவனே*

மலை கடவுள்  தன்மை கொண்டது * அம்மலையில் தேவமகளிர்  நடனம் புரிவர்* அவ்வரமகளிர்
குருதி நிறத்தில் குவளை மலர்களை சூடியுள்ளனர்* அருவியின் ஒசைக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர்*
முருகன் இளம்பெண்களை மயங்குமாறு  வருத்துவான் என்பது சங்ககாலத்து நம்பிக்கை* வேலன் என்பான்  பூசாரி.அவன் கார்காலத்தில் பூக்கும் கடப்பம்பூ மாலை சூடி வந்துள்ளான் * அப்பெண்ணின்
மயக்கம் தீர சாமி ஆடுவான்* அதற்குக் கூலியாக ப்பொருள் பெற்றுச்செல்வான்*அது பலி எனப்பட்டது*









Sunday, 2 February 2025

புணர்தல்

குறிஞ்சி  பாடல்  [  ஐங்குறு நூறு241  ]
------------
புணர்தல்  என்பது   தலைவனும்  தலைவியும்  தாமே  கூடும்  கூட்டம் ஆகும்*
இது  களவு  ஒழுக்கத்தின்  கண்  நிகழ்வது  ஆகும்*பிறர்  அறியாவண்ணம்  தலைவனும்  தலைவியும் மனம்   ஒத்தவராய்  உள்ளமும்  உடலும்  ஒன்றாகி
மகிழ்தல் ஆம்*
  இப்பாடல்  வெறிப்பத்து  என்னும்  பத்து  ப்பாடலுள்  ஒன்றாகும்*
வெறியாடல்  என்பது   வேலன்வெறியாடல்    என  வரும்* வேலன்  கடவுள்
குறிஞ்சி நிலத்தெய்வம்  முருகன்  ஆவன்*  வெறியாடல்  என்பது  தெய்வத்தால்  உண்டான  குறை  நீங்குமாறு செய்யும்  பூசையும்  ஆட்டமும்  ஆகும்*  வேலன்  என்பது  பூசை செய்வானையும் குறிக்கும்*
 
இப்பாடலின்  துறை  பின் வருமாறு:::  தலைவனும்  தலைவியும்  களவு  ஒழுக்கத்தில்  ஈடுபட்டனர்*  தலைவியிடம்  உள்ளமும்  உடலும்  மாறுபட்டது
கண்ட  தாய்  தலைவியை[  இற்செறித்தாள்]   இல்லத்தில்  காவலிட்டாள்* தலைவி தன்  தலவனை  நினைந்து  வருந்தினாள்*தன்னை  ப்பெற்றோர் பிறன்  ஒருவனுக்கு  மணம்  முடிப்பரோ  எனவும் கலங்கி  மெலிந்தாள்* இதன்  காரணம்  உணராத  தாய்   அறிவரை [  சோதிடர்  முதலானோர்]]  வினவவும்  அவர்  அக்குறைபாடு  தெய்வத்தால்  வந்தது என்றனர்*  தெய்வக்குறை  நீங்கின்  மகள் நலம் உறுவாள்  எனக்கருதி ய  தாய்  வேலனை  அழைத்துத் தெய்வக்குறை நீங்கும்  வண்ணம் வெறியாடல்  நிகழ்த்துக  என  வேண்டினாள்*  உண்மைக்  காரணம்  அறிந்த  தோழி  செவிலித்தாய்க்கு  உண்மை உணர்த்தும்  வண்ணம்   அறத்தொடு  நின்று  [[ தலைவி  தன் ஒழுக்கத்தில் குறைவு படாமல் இருத்தல்]]    தலைவியிடம்  கூறும்  கூற்றாய்  இப்பாடல்  வருகிறது*
    பாடலின்  பொருள்-----------
 
அழகிய  பற்களை உடைய  தோழியே ! {{ தோழி  தலைவியை தோழி என்றழைப்பாள்  }} நம்  தாய்  நாம்  உற்ற  துயரம் கண்டு  அதன்  காரணம்
அறிவதற்கு  வேலனை  அழைத்து அதன் காரணம் வினவுவாள்  .ஆனால்  மணம்  கமழும்
 குறிஞ்சி நாட்டின்  தலைமகனுடன் யாம்  கொண்டுள்ள  காதல்  தொடர்பை
அறிந்து  கூற  அவன்  வல்லவனோ ? அவனால்  அது  இயலாதல்லவா?--**
இது பாடலின் பொருள்..
 
இதில் தோழி  தலைவியையும்  உட்படுத்தி  நாம் என்னும்  சொல்லால் குறிப்பிடுகின்றாள்*

 தோழி  மட்டும்  தலைவியின்  களவு  ஒழுக்கத்தை  அறிந்துள்ளாள்*பிறர் அறியார்  *  தலைவி  மெலிந்து வருதுவதற்கு  தெய்வமே  காரணம்  என்பது
பிற மக்கள்  அறிந்த காரணம்** குறீஞ்சி நாட்டுத்தலைவனின்  நட்பை
வேலன்  அறியான்  என்று  செவிலித்தாய்  காதில்  விழுமாறு  தோழி தலைவியிடம்  கூறுகின்றாள்* அருகிலிருந்து  கேட்ட  செவிலித்தாய் தலைவியின்  காதலை  உணர்ந்து கொண்டாள்*தலைவன்  மணம்  வீசும்
குறிஞ்சித்தலைவன்  எனத்தோழி   கூறியதினால்  தலைமகன்  நல்ல புகழ் பெற்றவன்  என்பதும்  உணர்த்தினாள்  *செவிலித்தாய்  நற்றாய்க்கும் நற்றாய்
தந்தைக்கும்  உண்மை  உணர்த்தி யபின் த் தலைவியின்  திருமணத்திற்கு ப்பெற்றோர்  உடன்படுவர் என்பது நாட்டு வழக்கு*  குறிஞ்சி  நாடன் என்றதால்  குறிஞ்சிதிணை  புலப்பட்டது* பிறர் அறியாத காதல்  புணர்தலை  உணர்த்தியது*



`








Thursday, 4 February 2016

இரக்கம்

நெய்தல்               [ஐங்குறுநூறு--108]
===============
ஐந்தினைக்கும்  உரிய  உரிப்பொருள்களூள்  இரக்கம் என்பது  நெய்தல்  திணைக்குரிய  ஒழுக்கமாகும்*நெய்தல் திணைக்குக் கடலும்  அதைச்சார்ந்த நிலமும்  உரியது*சிறுபொழுது  கதிரவன்  மறையும் மாலை  ஆகும்*
பெரும்பொழுது  எல்லாக்காலங்களும் ஆகும்*
       இரக்கம்  என்பது  தலைவனைப்பிரிந்த தலைவியின் மிகுதியான தனிமைத்துயரம் பற்றியதுஆகும்*
இச்செய்யுள்  தாய்க்குரைத்த பத்து  என்னும்  பத்துப்பாடல்களில்  ஒன்றாகும்*

தலைவி தலைவனின்  களவு  ஒழுக்கத்தைத்  தோ ழி  செவிலித்தாய்க்கு  அறத்தொடு  நின்றபின்  தோழி கூற்றாய்  வருவது   இப்பாடல்*


தலைவனும்  தலைவியும்  களவு  ஒழுக்கத்தில்   ஈடுபட்டனர்* திருமணம் புரிந்து கொள்வதாககூறிச்சென்ற  தலைவன்  நீண்ட  நாள்  வாராமல் காலம்
தாழ்த்தினான்*செவிலித்தாய்  ஐயம்  கொண்டாள்*அவள்  தோழியிடம்  தலைவியை த்தலைவன் மறந்து விட்டானோ?  நும்மிடம்  அவன்  உரைத்தது  யாது  என வினவினாள்*அப்போது  தோ ழி கூறியதாக  இப்பாடல்  அமைந்துள்ளது*பாடலின்  பொருள்  பின் வருமாறு:

தோழியின்  கூற்று;;-------அன்னையே  நான்  கூறுவதைக்கேட்பாய்!  ஆற்றுக்கழிமுகத்தில் முள்ளிப்பூக்கள் மலரும்  கடல்நிலத்தலைவன் எம் தலைவன்*எம் [தலைவியின்]  தோள்  துறப்பான் ஆயின்  அவனால்  விரும்பப்பட்ட  தலைவியின்  தோள் என்ன  பயன்  உடையது ?----
இது  பாட்டின் சுருக்கம்*
     
விளக்கம்  ;--தலைவி  கற்பில்  சிறந்தவள்*  அவளை  விரும்பிய தலைவன்
வேறு  ஒரு பெண்ணை  நினைப்பான்  ஆயின்  தலைவியின்  தகுதி  இழிவு படும்  அல்லவா?  என் தலைவியை இழிவாக  எண்ணாதீர் ? என் தலைவியின்
தோளைத்தழுவிய  தலைவன்  பிறிதும்  ஒரு  பெண்ணை நினைக்கவும்  மாட்டான்* என் தலைமகளின்   தோள்  ஒருவனை  மட்டும்  தீண்டும்  தகைமை  உடையது* இது  நாம்  அறிந்தும்  அன்னையே  தலவனை  ஐயுறாதீர்/* வருவான்  தலைவியின் முகம்  நீர்முள்ளி பூப் போல  மலர  மணந்துகொள்வான்*  இன்று  அதில்  உள்ள  முள்ளைப்போல  தோன்றும் தலைவன்  மலர் போல் மகிழ்ச்சி  தருவான்   அன்னையே  ஐயுற வேண்டாம்
எனத்தோழி  கூறினாள்*
இப்பாடல்  உணர்த்தும்  பொருள்  இதுவாகும்*கழிகளையுடைய கடல் என்பது
நெய்தல்  நிலம்*முண்டகம்  நெய்தல்  நிலப்பூ* தலைவன்  எம் தலைவியின்
தோள்  துறக்கமாட்டான்  எனத்தோழி  கூறியது  தலைவியின்  இரக்கம்*
எனவே  நெய்தல்  திணை  ஆயிற்று*








---

Monday, 23 November 2015

ஊடல்

ஊடல்  என்பது   மருதத்திணைக்குரிய   உரிப்பொருள்  ஆகும்*மருதத்திணை
பாடல்களை  வகுக்கும்  போது   அதில்  வரும்  முதல்  ,கரு  ,உரிப்பொருளில்
ஒன்று  வரினும்  அப்பாடல்  அத்திணைப்பாடல்  என  வகுக்கப்படும்*
 ஐங்குறுநூறு   என்னும் அகநூலில்  ஐந்து  திணைகளுக்கும்  தனித்தனியே
நூறு  பாடல்கள்  அமைந்துள்ளன * முதலில் வருவது  மருதத்திணைப்பாடலாகும்* ஐங்குறுநூற்றில்  ஒவ்வொருதிணைக்கு வரும்    நூறுபாடல்களும் பத்துப்பத்துப்பாடல் கள்  கொண்ட  சிறுபிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன*
மருத்தத்திணையில்   முதலாவதுபத்துப்ப்ப்பாடல்களும்  வேட்கைப்பத்து  என்பதகும்*அதில் வரும்  ஒரு பாடலைக்காண்போம்*
--------------------
பாட்டின்  பொருள்;;திருமணத்தின்  பின்  களவுக்காலத்தில் என்னை ப்பற்றி
என்ன  நினைத்தீர்  எனக்கேட்ட  தலைவனுக்கு த்தோழி  கூறிய  பதிலாக
இப்பாடல்  அமந்துள்ளது
--------------
மன்னன் ஆதன்  வாழ்க!  அவினி  வாழ்க!  வேந்தனின்  பகைமை  கெட்டொழிக*அவ்வேந்தன்  நீடூழி  வாழ்க என க்கூறித்தன்  பிரிவுத்துயரை
மறைத்து  வாழ்ந்துவந்தாள்  தலைவி*
   தோழியராகிய  யாங்கள்  தாமரை  பூத்த   நீராடும்  துறை அமைந்த ஊருக்குத்தலைவன்  விரைந்து வந்து  எம் தலைவியை   திருமணம்  செய்க  என்றும்  தலைவனின்  உறவினர்  வந்து  மகட்கொடை வேண்டும்  பொழுதில்
  எம்தந்தையும்  மறுக்காமல்திருமணத்திற்கு உடன்படுக  எனவும் வேண்டிக் கடவுளைத்  தொழுதோம்   எனத் தோழியர்  கூறினர்*
----------------
*இப்பாடல்  மருதத்திணைப்பாடல் என்று  வகுக்கப்பட்டுள்ளது*  மருதத்திணைக்குரிய  பாடலின்  உரிப்பொருள்  ஊடல்  ஆகும்* ஊடலூக்குரிய  காரணம்  தலைவனின்  தகாத  ஒழுக்கமாகும்*கற்பொழுக்கத்தில்  தலைவன்  தலைவியை   ப்பிரிந்து  பரத்தையரோடு [பொதுமகளிர்]  பலநாள் பழகியபின்  மீண்டும்  தன் மனைக்குத்திரும்பும்  போது  தலைவி  ஊடுவதாக அகப் பாடல்களில்பெரும்பாலும்  சொல்லப்படுகிறது*ஊடல்  கற்பு  காலத்திற்குரிய
உரிப்பொருள்  ஆகும்*

இந்த  ஐங்குறுநூற்றுப்பாடல் தலைவிக்கு  திருமணம் ஆனபின்  களவுக்காலத்தில்  நடந்ததை பேசுகிறாது*தலைவனும் தலைவியும் பிறர்  அறியாவண்ணம்  களவொழுக்கத்தி ல்  ஈடுபட்டுவந்துள்ளனர்*தலைவன்   உன்னைப்பெற்றோர் உடன்பட  திருமணம்  செய்வேன் என  உறுதி  கூறிச்சென்றுள்ளான்*அதை  தோழி மட்டும்  அறிவாள் *பிறர் அறியாத அந்நிலையில்  தலைவி மற்றும்  தோழியின்  மனநிலை எவ்வாறு  இருந்தது  என்பதை  திருமணத்தின் பின் தோழி  தலைவனிடம் கூறுவதாக உள்ளது*இது இப் பாடலின்  துறை  ஆகும்*
இப்பாடலில்   மருதத்திற்கு  உரிய  ஊடல்  உரிபொருளாக  வரவில்லை*
 ஆயினும்  இது  மருதப்பாடல் ?  அகன்ற பொய்கையில்  மலர்ந்த  தாமரை
பூத்த  நீராடும் துறைகள்  கொண்ட  ஊரின்  தலைவன்  நம்  தலைவியை  மணம் முடிக்க  வேண்டும்  என்னும்  இடத்தில்;  மருதநிலத்து  ஊர்  பற்றி வருவதால்  கருப்பொருள் பற்றி  மருதத்திணைப்பாடல்  ஆயிற்று*
 தலைவி   அரசன்  பகை போர்  இன்றி  நீண்ட  நாள்  வாழ்க என்பதையே
எண்ணி  த்தலைவி அமைதியாக  பொறுத்திருந்தாள்*தோழி  மட்டுமே  தலைவன் உடன்  வந்து தலைவியை  மணம் புரிய வேண்டும்  தலைவியின்  பெற்றோரும்  மறுக்காமல்  உடன்பட வேண்டும்  என த்தெய்வத்தை வேண்டியிருந்தாள்*
நீர் நிறைந்த குளத்தில்தாமரை  பூத்துள்ள  ஊருக்குத்த்லைவன் எனக்கூறியதினால்  த்லவனின்  உயர்வும்  திருமணம்  செய்துகொள்வன் என்னும்  உள்ளுறை  பொருள்  உணர்த்தப்படுகிறது*
ஆதன் அவினி  என்பது  சேரமன்னன்  பெயராகும்* தலைவி  தன்  நாட்டு  மன்னன்  போரின்றி  நீடு  வாழ்ந்தால் தன்  வாழ்வும்  சிறக்கும்  என எண்ணிப்பொறூத்திருந்தாள்* தலைவனைப்பிரிந்த  வருத்தத்தில்  கண்ணீர் விட்டால்  பிறர்  அவள்  களவு   ஒழுக்கத்தை அறிந்து அலர்  பேசுவர்*
தலைவனும்  தலைவியும்  காதலித்தபின்னும் அவர்கள் தாமே  திருமணம் செய்து கொள்ளவில்லை*  தலைவன்  உறவினர்  தலைவியின் பெற்றோரிடம்
பெண்  கேட்டு வருவர் *அப்போது  தலைவியின்  தந்தை  மற்க்காமல்  உடன் பட  வேண்டும்  என்பதே  தோழி  இறைவனிடம் வேண்டுவதாகும்*
 இப்பாடல்  அழகியது*இம்மருததிணைப்பாடலில்  ஊடலே  இல்லை*
 நிலம்  மட்டும்  மருதம் *
 பழந்தமிழர்  திருமணத்தில்  பெண்ணின்  பெற்றோர் உடன்படவே  திருமணம்
நடந்தது  என்பதை  அறியலாம்*
 ஐங்குறுநூறு---6
  







Wednesday, 18 November 2015

சங்க இலக்கியம்

சங்க  இலக்கியம்   பண்பட்டது  *தொன்மை  வாய்ந்தது* தமிழின்  அரிய  பாடல்களின்  தொகுப்பு*  தமிழின்  இனிமையை   உணர்த்தும்  பாக்களை  
கற்கும்  தொறும்  பழம் தமிழரின்   மேன்மை  புலப்படும்*
   அகப்பாடல்கள்   தொல்காப்பியரின்   பொருளதிகார  இலக்கணத்தை   பின்பற்றும்  அரிய  இலக்கியம்  *
  ஆனால்  அகப்பாடல்களை  நுணுகி   ஆராய்ந்தால் மட்டும்  அதன்  இயல்பை
தெரிந்து கொள்ள இயலும்* சில  பாடல்களை  அராய்வோம்**